Tuesday, 28 May 2013

செம்பருத்தி பூவை போல பெண்ணொருத்தி

செம்பருத்தி  பூவை போல
பெண்ணொருத்தி நான் காண
கண்  துருத்தி அவளும் காண
 நான் உருகி வழிந்தேனே வெண்ணெயாய்

கண்ணில் கண்ட அந்த நிமிடம்
வண்ண   வண்ண மலர்கள் மனதில்
எண்ணங்களோ எகிறிக் குதிக்க
என்னுள் நானே வின்னில்  பறந்தேனே

சின்ன சின்ன அருவி போல
சிரிக்கும்  அவளின்  சிறு உதடு
சின்னாபின்னம் ஆக்கும் என்னை
பெண்ணோ இவளே பேரின்பப் பெட்டகம் என்றே

♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment